14.2
சதவிகிதம் கொண்ட இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறை வெறும்
நான்கு சதவிகிதம் மட்டுமே உள்ளது கவனிக்கதக்கது. மொத்தம் உள்ள 26
உயர்நீதிமன்றங்களில் உள்ள 601 நீதிபதிகளில் வெறும் 24 முஸ்லிம் நீதிபதிகளே
உள்ளனர். இது வெறும் 4% ஆகும்.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 74 நீதிபதிகளில் 15 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
ஆனால்
அங்கு வெறும் 4 நீதிபதிகளே முஸ்லிம்கள். அந்த 4 நீதிபதிகளிலும் நீதிபதி
அக்தர் ஹுசைன் கான் ஜனவரி 9 ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். மற்றும் ஒருவர்
இந்த வருடத்தில் ஓய்வு பெறுவார், இன்னொருவர் அடுத்த வருடத்தில் ஓய்வு
பெறுவார்.
ஹைதராபத்
உயர்நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 27 நீதிபதிகளில் 3 பேர் முஸ்லிம்களாக
இருக்க வேண்டும். மும்பை உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 59 நீதிபதிகளில் 7
பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது இரண்டு நீதிபதிகள்
மட்டுமே முஸ்லிம்கள். அதில் ஒருவர் இந்த வருடம் ஓய்வு பெறுகிறார்.
கல்கத்தா
உயர்நீதிமன்றத்தில் 42 நீதிபதிகளில் 11 முஸ்லிம் நீதிபதிகள் இருக்க
வேண்டும். தற்பொழுது அங்கே 2 நீதிபதிகளே முஸ்லிம்கள். அதிலும் ஒருவர் இந்த
வருடமும் மற்றொருவர் அடுத்த வருடமும் ஓய்வு பெறுகின்றனர். டில்லி
உயர்நீதிமன்றத்தில் 39 நீதிபதிகளில் 5 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
ஆனால் அங்கு 2 பேர் தான் நீதிபதிகளாக உள்ளனர்.
அஸ்ஸாம்,
சென்னை,மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஹரியானாவில் தலா 16, 37, 30
மற்றும் 50 நீதிபதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஜம்மு கஷ்மீரில் 10
நீதிபதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். அதில் ஒருவர் அடுத்த வருடம் ஓய்வு
பெறுகின்றார். கேரளாவில் 35 நீதிபதிகளில் 5 பேர் முஸ்லிம்கள். அதில் இரண்டு
பேர் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றனர்.
பாட்னாவில்
28 நீதிபதிகளில் 2 பேர் முஸ்லிம்கள் அதில் ஒருவர் இந்த வருடம் ஓய்வு
பெறுகின்றார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகளில்
ஒருவர்தான் முஸ்லிம். அவரும் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றார்.
உத்திரகாண்டில் 6 நீதிபதிகளில் ஒருவரும் முஸ்லிம் இல்லை.
இந்திய ஜனத்தொகையில் இஸ்லாமிய சமுதாயத்தின் விகிதாசாரத்தை கணக்கிடும் பொழுது 86 நீதிபதிகள் இருக்க வேண்டும்.
கடந்த 3 வருடங்களாக மில்லத் கல்வி அறக்கட்டளை LAW படிக்க முழு உதவி அளிக்கபடும் என்று விளம்பரம் செய்தது ஆனால் இன்னும் நமது மக்கள் இடத்தில சரியான விழிப்புணர்வு இல்லை, இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் இதற்காக முயற்ச்சிகள் செய்யப்படும், அதற்காக நமதூர் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக