Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

செவ்வாய், 26 ஜனவரி, 2016

இன்று 67வது குடியரசுதினம்: அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

இன்று 67வது குடியரசுதினம்: அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்... 

 

''நாட்டுப்பற்று மிக்க நுாறு இளைஞர்களை தாருங்கள். இந்தியாவையே உயர்த்திக்காட்டுகிறேன்'' என்றார் சுவாமிவிவேகானந்தர். இன்றைக்கு உலகில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளம் படை சாதிக்கும் பட்டாளமாக உருவெடுக்க வேண்டுமென குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.

இந்தியாவுக்கு 1947 ஆக., 15ல் சுதந்திரம் கிடைத்தாலும் உண்மையான சுதந்திரம் என்பது, நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஜன., 26 தான். அன்றுதான் இந்தியா முழு ஜனநாயக நாடாக உருவெடுத்தது. அப்போது முதல் தன் ஜனநாயக பாதையில் சிறிதும் விலகாமல் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இன்று 67வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களிடம் தான் சாதிக்க வேண்டும் என்ற தாகம் அதிகளவு இருக்கும். அறிவு, புதிய சிந்தனை, கற்பனை வளம், எதிர்கால தலைவர் என அனைத்து திறமைகளும் இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் அவசிய தேவையாக உள்ளனர். உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு 10 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் 35.6 கோடி பேர் உள்ளனர்.
மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனா, இதில் 2ம் இடத்தில் தான் இருக்கிறது. அங்கு 26.9 கோடி இளைஞர்கள் தான் உள்ளனர். உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா 4வது இடத்தில் உள்ளது. அங்கு 6.5 கோடி இளைஞர்கள் உள்ளனர்.
மோடி திட்டம் :
வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இவர்களது திறமை பளிச்சிடும் தருணம் தற்போது வந்துள்ளது. இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த பிரதமர் மோடி முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த குடியரசு தினத்தின் சிறப்பம்சமாக 'ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா' ஆகிய திட்டங்களை துவக்கியுள்ளார். இது இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், வேலைவாய்ப்பளிக்கும் விதமாகவும் உள்ளது.
வேலைவாய்ப்பு பெருகும் :
'ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன அறிவியல், தொழில்நுட்ப சிந்தனைகளுடன் புதிதாக துவக்கப்படும் நிறுவனங்கள், 'ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்' எனப்படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு முதல் மூன்று ஆண்டு வரிச்சலுகை, நிறுவனத்தை 'ஆப்' மூலம் பதிவு செய்தல், நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு காப்புரிமை பெறும் வசதி, வங்கிகள் மூலமாக எளிதாக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே போல இன்றைய தினம் 'ஸ்டேண்ட்அப்' இந்தியா என்ற திட்டமும் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் வங்கிகளில் கடன் பெற முடியும். அரசின் இந்த திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சோர்ந்து விட்டால்
உனைச் சுற்றி சுவரெழுப்பி விடுவார்கள்
புறப்பட்டு விட்டால் -
நீ
போகிற பாதையை
யாரும்
பூட்டி வைக்க முடியாது!
அழுவதன் மூலம்
எதையும் அடைந்துவிட முடியாது
எழுவதன் மூலம்
எதுவும் இயலும்
என்ற கவிஞர் மு. மேத்தாவின் வரிகளுக்கு ஏற்ப இளைஞர்கள் எழுச்சி கண்டால், அப்துல் கலாம் கண்ட 'வல்லரசு' நாடாக இந்தியா மிக விரைவில் உருவெடுக்கும்.
இரண்டு நாள் அரசு விடுமுறை:
* 1950 ஜன., 26ல் காலை 10.24 மணிக்கு குடியரசு தின நிகழ்ச்சி துவங்கும் முன், ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் பதவியேற்பு.
* இந்திய வரலாற்றில் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றது இந்த ஒருமுறை தான்.
* 1950 ஜன., 26 காலை 10.30 மணிக்கு 31 குண்டுகள் முழங்க, குடியரசு நாடு என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
* அப்போது போல புல்லட் புரூப் வாகனத்தில் ஜனாதிபதி வரவில்லை. சாரட் வண்டியில் தான் அணிவகுப்பை பார்வையிட்டார்.
* தற்போது தேசிய மைதானமாக இருக்கும் இர்வின் மைதானத்தில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடந்தது. 15 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். 1955 முதல் ராஜ்பாத்தில் நடக்கிறது.
* முதல் வெளிநாட்டு விருந்தினராக, இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோ பங்கேற்பு.
* முதல் குடியரசு தினத்துக்கு 2 நாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
* அணிவகுப்பில் பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளவில்லை. ராணுவத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

நிஜமான எஜமான் :
இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு பின், இந்தியாவுக்கு அரசியலமைப்பு சட்டம் உருவாக்க 1947 ஆக.29ல் வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அம்பேத்கர் பொறுப்பேற்றார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், பலமுறை திருத்திய பின், அக்குழு தந்த வரைவினை, அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது. 1950 ஜன., 26 காலை 10.18 மணிக்கு அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இதை தயாரிப்பதற்கு 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் ஆனது. அரசியல் சாசனமே நாட்டின் எஜமான். இது ஒரு நீண்ட எழுதப்பட்ட ஆவணம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அப்போது 80 ஆயிரம் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது. ஒருநாளில் இதை வாசித்துவிட முடியாது . இதில் முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்புக்களை பெற்றது.

வரலாறு முக்கியம்:
மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு பதிலடி:
ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடும் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹோலண்டே, குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பயங்கர வாதத்தை ஒழிப்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது என்பதையும் பிரதமர் மோடி உலகுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.
ஏன் வித்தியாசமானது
மக்களுக்கு பயன்படக்கூடிய, சந்தையில் இடம்பிடிக்கத்தக்க புதுமை படைப்பு, அதை நுகர்வோர்க்கு ஏற்றதாக மேம்படுத்துதல் ஆகிய மூன்றும் இருந்தால் தான் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படும். மாறாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களை மேம்படுத்தும் திட்டமாகவோ, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்ததாகவோ இருக்கக்கூடாது. மேலும் இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்பது வரிச்சலுகையோ, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடோ, காப்புரிமை சலுகையோ அல்ல. இளைஞர்கள் மத்தியில் எழுப்பப்பட இருக்கும் உற்சாகமும், உத்வேகமும் தான் இத்திட்டத்தின் தனிச்சிறப்பு.
பிரான்ஸ் கவுரவம்
ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும், வெளிநாட்டு தலைவர் ஒருவர், விருந்தினராக பங்கேற்பது வழக்கம். இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கும் பாகிஸ்தான், சீனா நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொண்டது சிறப்பு. அதிகபட்சமாக பிரான்சிலிருந்து ஐந்து முறை அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் பூடா னில் இருந்து நான்கு முறை விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.
யார் அதிகம்
அதிக முறை குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமை டாக்டர் ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு (1950 - 62) தலைமை வகித்துள்ளார்.
யார் குறைவு
நாட்டின் 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாவுக்கு (1968,69) மட்டுமே தலைமை வகித்தார். ஏனெனில் இவர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
பின்னணி என்ன
சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்னரே, 1930 ஜன.26ஐ, சுதந்திர தினமாக அப்போதைய தலைவர்கள் கொண்டாடினர். காந்தி அறிவிப்பின் பேரில் அன்று எடுத்துக் கொண்ட உறுதிமொழி,'இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும் அரசாட்சிக்கு அடிபணிந்து நடப்பது மக்களுக்கும், இறைவனுக்கும் செய்யும் துரோகம்' என்பது தான். சுதந்திரம் பெற்ற பின் நேரு அமைச்சரவை குடியரசு தினத்தை காந்தி ஏற்கனவே அறிவித்த ஜன.26ல் கொண்டாடுவது என முடிவு செய்தது.
தேசிய கீதம்
தேசிய கீதம் முதன்முதலில் 1911, டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. தற்போது நுாற்றாண்டுகளை கடந்து அனைவரது உணர்விலும் கலந்துள்ளது. இப்பாடல் 1950 ஜன.24ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம் வங்காள மொழியில் 'பாரத விதாதா', ஆங்கிலத்தில் 'தி மார்னிங் சாங் ஆப் இந்தியா' என அழைக்கப்படுகிறது.
பாசறை திரும்புதல்
குடியரசு தின விழா முடிந்து, ஜன., 29ம் தேதி மாலை, படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடக்கும். மூன்று படை களும் இவ்விழாவில் பங்கேற்கும். ராஷ்டிரபதி பவனில் விஜய் சவுக் என்ற பகு தியில் நடக்கிறது. தரைப்படை, கடற்படை, விமா னப்படையின் 'பேண்டு' வாத்திய இசையுடன் விழா துவங்கும். ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் விழாவுக்கு தலைமை ஏற்பார். ஜனாதிபதிக்கு 'சல்யூட்' அளிக்கப்பட்டு, 'பேண்டு' வாத்தியம், 'டிரம் பட்'டில் தேசிய கீதமும் இசைக்கப்படும். ஜனாதிபதி வணக்கம் செலுத்துவதுடன் படை திரும்புதல் நிகழ்ச்சி நிறைவடையும்.

 

திங்கள், 25 ஜனவரி, 2016

குரல்வளை நெறிக்கும் கொள்கை!

 


ல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும். சமூக அநீதிகள் அங்கும் அப்படியே பிரதிபலிக்குமானால் கல்வியும், கல்வி வளாகமும் இருந்து என்ன பயன்?


இந்திய தேசம் சுதந்திரமடைந்து  68 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளியில் இந்தியன் பல நிலைகளில், பல துறைகளில் வளர்ச்சியடைந்தும், மனிதன் எனும் நிலையில் ஏனோ இன்னும் வளர்ச்சியடையாமலே இருக்கின்றான். ஒரு மனிதன் சக மனிதனை தனது அன்பால், நேசத்தால் இணைக்காமல், அவனை துச்சமாக, இழிவாக பார்க்கும் அளவுக்கு ஆதிக்கவெறி என்னும் நெருப்புக் கற்கள் சிலரின் உள்ளங்களில் நிறைந்து காணப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தொடர் தாக்குதலின் வெளிப்பாடே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை சார்ந்த தோழர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை. (SatyaMargam.com)
ஒரு சித்தாந்தம், ஒரு கொள்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லது தன்னை மேலோங்க செய்வதற்காக அது தன்னிடமுள்ள சமூகப் பிரச்சனைகளுக்கான அழகிய தீர்வுகளை முன்வைக்க வேண்டும் அல்லது தான் பிறரிடமிருந்து எப்படி வேறுபட்டு சிறந்து விளங்குகின்றோம் என்று சொல்ல வேண்டுமே தவிர, பிற சித்தாந்தங்களின், பிற கொள்கைகளின் குரல்வளைகளை நெரித்துவிட்டு தான் சிறந்தவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா அம்பேத்கர் பேரவையின் மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனை தாங்க முடியாத வி.ஹெச்.பி அமைப்பினரும், சில அமைச்சர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நிர்வாகம் ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை விடுதியிலிருந்து நீக்கம் செய்ததோடு, அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களின் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து மன அழுத்தத்தை தாங்க முடியாமல் இறுதியில் ரோஹித் வெமுலா தனது பிறப்பையே கேள்வி கேட்டவராக தற்கொலை செய்து கொண்டுள்ளார். நமது தேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கான இன்னொரு சாட்சியம் தான் ரோஹித் வெமுலாவின் மரணம்.

ஒரு சித்தாந்தம், ஒரு கொள்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லது தன்னை மேலோங்க செய்வதற்காக அது தன்னிடமுள்ள சமூகப் பிரச்சனைகளுக்கான அழகிய தீர்வுகளை முன்வைக்க வேண்டும் அல்லது தான் பிறரிடமிருந்து எப்படி வேறுபட்டு சிறந்து விளங்குகின்றோம் என்று சொல்ல வேண்டுமே தவிர, பிற சித்தாந்தங்களின், பிற கொள்கைகளின் குரல்வளைகளை நெரித்துவிட்டு தான் சிறந்தவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? கொள்கையை பரப்புவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அநியாயமே....!
தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பினரும் வளர்ச்சி பெறுவதுதானே தவிர ஒரு குறிப்பிட்ட சாரார் வளர்ச்சி பெற்று இன்ன பிற சாரார் வளர்ச்சி பெறாததல்ல...!
தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றது, இப்போது பி.ஜே.பி அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த மாதிரியான தாக்குதல்கள் கல்வி வளாகங்களை குறிவைத்தும் நடத்தப்படுகின்றன. இந்த ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை, ஆட்சி முறையை விமர்சனம் செய்வதற்கு என்ன தடை இருக்கின்றது? இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. மேலும், தனக்கெதிராக பேசக்கூடிய, நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய குரல்களை அதிகாரத்தைக் கொண்டு நசுக்க நினைக்கின்றது மத்திய அரசு.

தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பினரும் வளர்ச்சி பெறுவதுதானே தவிர ஒரு குறிப்பிட்ட சாரார் வளர்ச்சி பெற்று இன்ன பிற சாரார் வளர்ச்சி பெறாததல்ல...! பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் ஆராய்ச்சி களத்திற்கு வருவது என்பது வளர்ச்சிக்கான அடையாளம்! அதனை ஒடுக்க நினைப்பது ஆதிக்க வர்க்கத்தின் அகங்காரம்!

பி.ஜே.பி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு கல்வி காவிமயமாக்கப் படுதலுக்கான பணிகளைத் தொடர்ந்து இப்போது கல்வி வளாகங்களையும் காவிமயமாக்க நினைக்கின்றது. காவிமயமாக்கலின் ஆரம்ப விளைவே மாணவர்களின் மீதான நடவடிக்கை. இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது. கல்வியும், கல்வி வளாகமும் காவிமயமாக்கப் படுதலுக்கு எதிராக மாபெரும் மாணவ கிளர்ச்சி ஏற்பட்டே ஆக வேண்டும். அதற்காக ஒட்டுமொத்த மாணவ சமூகமும் போராட வேண்டும். நமது போராட்டங்கள் மனித நேயமிக்க புதிய தலைமுறை உருவாக்குவதற்காகவும், நமக்கு மத்தியில் காழ்ப்புணர்வை, ஏற்றத்தாழ்வினை  ஊட்டக்கூடியவர்களை அடையாளம் கண்டு தோல்வியுற செய்வதற்காகவும் பயன்படட்டும். நிச்சயமாக நமது இந்த ஆக்கப்பூர்வமான ஒவ்வொரு போராட்டமும் ரோஹித்  வெமுலாவின் கனவை நனவாக்கலாம்.


-  M. சையது அபுதாஹிர் M.Sc., M.Phil., (Ph.D)




இந்தியாவில் 80% என்ஜீனியர்கள் “ஏட்டுச் சுரைக்காய்”தான்!

டெல்லி: இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் மேலான பொறியியல் பட்டதாரிகள் திறமை குறைவால் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஹரியானா மாநிலம், குர்கானை தலைமையிடமாகக் கொண்ட "ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்" என்ற தேசிய அளவிலான வேலைவாய்ப்பு மதிப்பாய்வு நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது.

நாட்டில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்தனர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

சாயம் வெளுத்த பொறியியல் துறை: 
 
ஒருகாலத்தில் "என் புள்ளை என்ஜீனியர்" என்று பெருமை பட வைத்த படிப்பு இன்றைய மாணவர்களுக்கு சாதாரண பட்டப்படிப்பு போல் மாறிவிட்டது. அதனால் பொறியியல் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, இளநிலை பட்டப்படிப்பு தொடர்புடைய கல்வித் திட்டங்களை வேலைவாய்ப்பு நோக்கிலானதாக உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
 
 
இரண்டே நகரங்கள்தான்: 
 
நம் நாட்டு நகரங்களைப் பொருத்தவரை வேலைவாய்ப்புகளைப் பெற்ற அதிக அளவிலான பொறியாளர்கள் உள்ள நகரம் டெல்லி ஆகும். அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு உள்ளது.

80 per of engineering graduates in India unemployable
பொண்ணுங்க ஜாஸ்திதான்: 
 
பாலின அடிப்படையில் பார்த்தால், ஆண், பெண் இரு பிரிவினரும் சரிசமமான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். எனினும், தகவல் தொழில்நுட்பம் இல்லாத துறைகளில் விற்பனைப் பொறியாளர்கள், இணையதளங்களில் கட்டுரைகள் எழுதுவது உள்ளிட்ட துறைகளில் ஆண்களை விட பெண்கள் சற்று அதிகமாகப் பணிபுரிகின்றனர்.
 
ஏட்டுச் சுரைக்காய் போதாது: 
 
 நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் அவர்கள் வேலைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை பெற்றிருப்பதில்லை என முதன்மையான நிறுவனங்கள் குறை கூறுகின்றன.
 
கல்விமுறை மாற வேண்டும்: 
 
 எனவே மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அடிப்படையில் கல்வியையும், பயிற்சி முறைகளையும் மேம்படுத்துவது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
 
http://tamil.oneindia.com/news/india/80-per-engineering-graduates-india-unemployable-245224.html





வியாழன், 21 ஜனவரி, 2016

தேவை ஜி.டி. நாயுடுகள்!







 
மத்திய அரசு ‘ஸ்டார்ட் அப் மிஷன்’ என்ற இயக்கத்தை ஜனவரி 16 அன்று தொடங்கியுள்ளது. அரைத்த மாவையே அரைக்கும் மனப்பான்மையைக் கைவிட்டுப் புதுமையான தொழில்களை உருவாக்க உதவும் மையங்களை உருவாக்குவதே இந்த இயக்கம். மத்திய அரசின் மனிதவளத் துறையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து இத்தகைய 75 மையங்களை உருவாக்க உள்ளன. 

தொழில் முனைப்பே பண்பாடாக
இந்தியாவில் உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் (IIT), ஐ.ஐ.எம்.கள் (NIT), தேசியத் தொழில்நுட்ப நிலையங்கள் (NIT), இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிலையங்கள் (IIIT), அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் (IISER), பார்மாசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிலையங்கள் (NIPER) போன்றவற்றின் வழியாகத் தொழில் முனைப்பையே ஒரு பண்பாடாக இளைய தலைமுறையிடம் பரப்புவதே இதன் நோக்கம். இத்தகைய முன்முயற்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தாலும் தற்போது வேகமடைந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி-யிலும் ஐ.ஐ.எம்மிலும் படித்து முடித்தவர்கள் பொதுவாக ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துப் போய்விடுவார்கள். அத்தகையவர்கள் தங்களுக்கான சொந்தத் தொழிலைத் தொடங்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இத்தகையோரின் எண்ணிக்கை சில ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு சதவீதமாக இருந்தது. தற்போது 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. மற்றக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் இத்தகைய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழுந்துள்ளன.
அத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, மத்திய அரசின் மனிதவளத் துறையும் அறிவியல் தொழில்நுட்பத்துறையும் இணைந்து உயர்கல்வி நிறுவனங்களில் ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் முன்முயற்சி மையங்களை ஆரம்பிக்கின்றன. இவற்றை ஆரம்பிக்க ஐயாயிரம் சதுரஅடி உள்ள இடமும் ஒரு வருடத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதியும் தேவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் எனும் சிசுக்கள்
அப்போதுதான் பிறந்துள்ள சிசுக்களை இன்குபேட்டர் என்னும் பாதுகாப்புச் சாதனங்களில் வைத்து வளர்ப்பதைப்போலத் தொழில்நுட்ப வணிகம் பற்றிய புதிய கருத்துகளைச் சிதையாமல் வளர்ப்பதற்கான ஆதரவு தேசியத் தொழில்நுட்ப நிலையங்களில் (NIT) அமைக்கப்படுகிற மையங்களில் கிடைக்கும். இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் மொட்டுகளின் பருவத்தில் உள்ள 20 தொழில்நிறுவனங்கள் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு மையத்தின் செலவு 5 கோடிகளிலிருந்து 10 கோடிகள் வரை இருக்கும். இத்தகைய இன்குபேட்டர்களின் எண்ணிக்கை 2014 ல் 80 ஆக இருந்த 2015-ல் 110 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 50 சதவீதமானவை டெல்லி, மும்பை, பெங்களூர், ஆகிய நகரங்களுக்கு வெளியில் உருவாக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டின் ஐ.ஐ.டியில் உள்ள ஆராய்ச்சிப் பூங்காவைப் போல மேலும் சில கல்விநிறுவனங்களிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஆராய்ச்சிப் பூங்காவுக்கும் 70 கோடி முதல் 100 கோடி ரூபாய்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது இத்தகைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. உதாரணமாக, ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற இணையதளங்கள். இவை ஆன்லைன் வணிகத்தில் பெயர் பெற்றுவிட்டன. மேக்-மை-டிரிப் எனும் இணையதளமும் விமான-பேருந்துப் பயணங்களுக்கும் விடுதிகளுக்கும் முன்பதிவு செய்யும் சேவையை அளித்துவருகிறது. 

சின்னதில் உள்ள பெரியது 
 
கிடைக்கிற சின்னச்சின்ன வாய்ப்புகளை வைத்துக்கொண்டு பெரும் பெரும் காரியங்களைச் செய்வது மனிதர்களின் பாரம்பரியப் பழக்கம்தான். அது ஒன்றும் அதிசய மனிதர்களின் அற்புத ஆற்றல் இல்லை. இத்தகைய மனித ஆற்றலை ஒருங்கிணைத்துத்தான் நம்மைவிட வளம் குறைந்த மண்ணைக் கொண்ட சீனா தொழில் உற்பத்தியில் நம்மைவிட முன்னே இருக்கிறது. கிடைப்பதற்கு அரிய தண்ணீரைச் சொட்டு சொட்டாகப் பயன்படுத்தி நாடு தனக்கான விவசாய விளைபொருள் தேவைகளை இஸ்ரேல் உருவாக்கிக்கொள்கிறது. இந்தியாவும் அதே வழியில் பயணம் செய்தால் தனது உடல் ஆற்றலையும் மூளை ஆற்றலையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து மக்களுக்கு நல்வாழ்வைத் தரமுடியும். 

இத்தகைய முன்முயற்சிகள்தான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங் களில் வழியாகத் தூண்டப்படுகின்றன. இவை தேவைதான். ஆனால், புதுமை படைக்கும் திறன் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மட்டும் இல்லை. 

படிக்காத மேதைகள்
கணினி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய தொழில் அதிபர் பில்கேட்ஸ் பாதியிலேயே படிப்பை விட்டவர். அவர்தான் ‘விண்டோஸ்’ எனும் கணினி இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி எழுத்தறிவு இல்லாத பாமரனும் கணினியைக் கையாள முடிகிற அதிசயத்தை ஏற்படுத்தினார்.
ஒரு வீடு அளவில் பெரியதாக இருந்த கணினியை இன்று நமது மேஜையிலும் மடியிலும் சட்டைப் பாக்கெட்டிலும் கொண்டுவருவதில் பெரும்பங்கு வகித்த ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர்தான்.
அவ்வளவு ஏன்? இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று புகழப்படுபவர் ஜி.டி. நாயுடு. அவர் மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கூடத்தை டிஸ்மிஸ் செய்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர். 1920-ல் ஒரு பஸ்ஸைத் தமிழ்நாட்டில் சாலையில் ஓட்டி ‘பஸ் போக்குவரத்து’ என்ற புதுமையைத் தமிழகத்துக்குக் காட்டியவர்.1933-ல் 280 பஸ்களின் உரிமையாளர் ஆனார். 

1937-ல் இந்தியாவின் முதல் மோட்டாரை அவர் கண்டுபிடித்தார். உலகத்தரமான எலக்ட்ரிக் சேவிங் ரேஜரை கண்டுபிடித்தார். விவசாயத்திலும் சித்த மருத்துவத்திலும் பல புதுமைகள் செய்தார். கேமராக்கள், மண்ணெண்ணெயில் ஓடும் விசிறி, வாக்குப்பதிவு இயந்திரம் என அவரது கண்டுபிடிப்புகளின் பரப்பளவு பெரியது.
இந்தியாவில் தற்போது இத்தகைய புதுமையான தொழில் முன்முயற்சிகள் 4200 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இத்தகைய முயற்சிகளில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. உயர்கல்வி படித்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். புதுமையான படைப்பாக்கத் திறன் கொண்ட எந்த ஒரு தனிமனிதருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அத்தகைய முன்முயற்சிகள் செழித்து வளர்வதில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

http://tamil.thehindu.com/general/education.


நமதூரில் திறமையானவர்கள்  இல்லையா ? அதிகம் இருக்கின்றோம், ஆனால் நம்முடைய திறமைகளை உணராமல் கொடுத்த வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருக்கின்றோம்,நமதூர் மாணவர்களை சரியான முறையில் ஊக்குவிக்கும் போது இன்ஷாஅல்லாஹ் பல ஜி.டி. நாயுடுகளை நமதூரில்  உருக்க முடியும் . 

இப்படிக்கு 
மில்லத் கல்வி அறக்கட்டளை. 

செவ்வாய், 19 ஜனவரி, 2016

லெப்பைக்குடிக்காடு அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி இன்ஷா அல்லாஹ் விரைவில் திறப்புவிழா

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம் நீதிபதிகளின் சதவிகிதம் வெறும் 4%

14.2 சதவிகிதம் கொண்ட இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறை வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே உள்ளது கவனிக்கதக்கது. மொத்தம் உள்ள 26 உயர்நீதிமன்றங்களில் உள்ள 601 நீதிபதிகளில் வெறும் 24 முஸ்லிம் நீதிபதிகளே உள்ளனர். இது வெறும் 4% ஆகும்.
 
 
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 74 நீதிபதிகளில் 15 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

ஆனால் அங்கு வெறும் 4 நீதிபதிகளே முஸ்லிம்கள். அந்த 4 நீதிபதிகளிலும் நீதிபதி அக்தர் ஹுசைன் கான் ஜனவரி 9 ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். மற்றும் ஒருவர் இந்த வருடத்தில் ஓய்வு பெறுவார், இன்னொருவர் அடுத்த வருடத்தில் ஓய்வு பெறுவார்.
ஹைதராபத் உயர்நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 27 நீதிபதிகளில் 3 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். மும்பை உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 59 நீதிபதிகளில் 7 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது இரண்டு நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள். அதில் ஒருவர் இந்த வருடம் ஓய்வு பெறுகிறார்.
கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 42 நீதிபதிகளில் 11 முஸ்லிம் நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்பொழுது அங்கே 2 நீதிபதிகளே முஸ்லிம்கள். அதிலும் ஒருவர் இந்த வருடமும் மற்றொருவர் அடுத்த வருடமும் ஓய்வு பெறுகின்றனர். டில்லி உயர்நீதிமன்றத்தில் 39 நீதிபதிகளில் 5 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் அங்கு 2 பேர் தான் நீதிபதிகளாக உள்ளனர்.
அஸ்ஸாம், சென்னை,மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஹரியானாவில் தலா 16, 37, 30 மற்றும் 50 நீதிபதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஜம்மு கஷ்மீரில் 10 நீதிபதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். அதில் ஒருவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுகின்றார். கேரளாவில் 35 நீதிபதிகளில் 5 பேர் முஸ்லிம்கள். அதில் இரண்டு பேர் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றனர்.
பாட்னாவில் 28 நீதிபதிகளில் 2 பேர் முஸ்லிம்கள் அதில் ஒருவர் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகளில் ஒருவர்தான் முஸ்லிம். அவரும் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றார். உத்திரகாண்டில் 6 நீதிபதிகளில் ஒருவரும் முஸ்லிம் இல்லை.
இந்திய ஜனத்தொகையில் இஸ்லாமிய சமுதாயத்தின் விகிதாசாரத்தை கணக்கிடும் பொழுது 86 நீதிபதிகள் இருக்க வேண்டும்.
 
 
 
கடந்த 3 வருடங்களாக மில்லத் கல்வி அறக்கட்டளை LAW படிக்க முழு உதவி அளிக்கபடும் என்று விளம்பரம் செய்தது ஆனால் இன்னும் நமது மக்கள் இடத்தில சரியான விழிப்புணர்வு இல்லை, இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் இதற்காக முயற்ச்சிகள் செய்யப்படும், அதற்காக நமதூர் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கின்றோம்.

சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல்

சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல் | நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல் | நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி.,சார்பில், தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இன்ஜினியரிங், மருத்துவம், வனத்துறை பணிகளுக்கும், தனி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டிலும், யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் பட்டியல், ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படும். நடப்பாண்டுக்கான உத்தேச பட்டியல், தற்போது வெளியாகி உள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடக்கும். அதற்காக விண்ணப்பிக்கும் தேதி, ஏப்., 23ல் துவங்கி, மே, 20ல் முடிகிறது. தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, முதன்மை தேர்வு, டிச., 3 முதல், ஐந்து நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

சனி, 16 ஜனவரி, 2016

Anna University Recruitment 2016 | Junior Assistant and Office assistant RRB RECRUITMENT 2016

Anna University Recruitment 2016 | Junior Assistant and Office assistant RRB RECRUITMENT 2016 |அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Assistant மற்றும் Office Assistant வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 29.01.2016... விரிவான விவரங்கள் ...

ANNA UNIVERSITY
SARDAR PATEL ROAD, CHENNAI – 600 025.
Advt.No.001/PR33/2016, Dated :13. 01.2016
Applications are invited for the following posts of Anna University, Chennai
600 025.
Name of the Post: Junior Assistant  - 45 Posts
Office Assistant - 75 Posts

Total Vacancies: 120 Posts 
Pay Scale: 
Junior Assistant  : PB-1, Rs.5200-20200 +2400 Grade Pay 
Office Assistant: PB-1A, Rs.4800-10000 + 1300 Grade Pay
How to Apply:
Prescribed application form, together with information and instructions to the candidates, containing the details of qualifications, experience etc. can be downloaded from the Web Site http://www.annauniv.edu. The candidates shall send the application duly enclosing a Demand Draft for Rs.750/- for General category and Rs.500/- for Tamilnadu SC/ST candidates dated not earlier than 13.01.2016 along with the required enclosures to the Registrar, Anna University, Chennai-25.
Last date for the receipt of completed application is 29.01.2016 by 5.00 p.m 
Download official Notification: https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf