Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

நன்றிக் கடன்.....

 நன்றிக் கடன்.....
*******************
கல்வி மற்றும் மருத்துவம் மனிதனின்
மூலாதாரமான இரண்டு துறைகள்
வரலாறு முழுவதும் முஸ்லிம்
ஆட்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள்
அனைவரும் கல்வியையும் மருத்துவத்தையும்
சேவையாக இறைவனுக்கு செய்கின்ற
வழிபாடாகவே செய்துள்ளனர்


தமிழக முஸ்லிம்களில்
வள்ளல்களாக வாழ்ந்து மறைந்துள்ள
முந்தைய தலைமுறை இரத்தம் சிந்தி
உழைத்து உண்டாக்கிய சொத்துக்களை......
அள்ளிக் கொடுத்த கொடையின் அடையாளம் தான்
இன்று வளர்ந்து நிற்கும்......


வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி
அதிரை காதிர் மொய்தீன் கல்லூரி,
சென்னை புதுக்கல்லூரி
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
இளையான்குடி ஜாகிர் ஹுசைன் கல்லூரி
போன்ற கலை அறிவியல் கல்லூரிகள்
தியாகத்தின் அடையாளமாக நிற்கும்
இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்து
இப்போது பொருளாதாரத்தில் வளர்ந்து
நிற்கும் இன்றைய தலைமுறை திருப்பி
இந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு
இரண்டு மடங்காக செய்ய கடமைப்பட்டுள்ளது
அது தான் நன்றிக் கடன். 


அப்போது கூட அவர்களின் தியாகத்தை
நெருங்க இயலாது.
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில்
தமிழக மக்களுக்கு இலவசமாக கல்வி வழங்கும்
பொறுப்பை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு இன்றைய தலைமுறை தங்களது
சொத்துக்களை தியாகம் செய்ய முன்வர வேண்டும்
-cmn saleem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக