Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

புதன், 20 ஏப்ரல், 2016

சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன?

 
சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன? - ஒரு பார்வை

நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants).
குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாமே!
மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் கீழ்க்கண்ட 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.

1.) Indian Administrative Service (I.A.S.)
2.) Indian Foreign Service (I.F.S.) 3.) Indian Police Service (I.P.S.)
4.) Indian P&T Accounts & Finance Service Group - A
5..) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A
6.) Indian Customs and Central Excise Service - GP-A
7.) Indian Revenue Service GP-A
8.) Indian Ordinance Factories Service GP-'A'
9.) Indian Postal Service - GP - 'A'
10.) Indian Civil Accounts Service GP-'A'
11.) Indian Railway Traffic Service GP-'A'
12.) Indian Railway Accounts Service GP-'A'
13.)Indian Railway Personal Service GP-'A'
14.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force
15.) Indian Defence Estates Service, GP-A
16.) Indian Information Service (Junior Grade) GP-A 17.) Indian Trade Service GP-A
18.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force
19.) Central Secrateriat Service GP-B
20.) Railway Board Secretariat Service GP-B
21.) Armed Forces Head Quarters Civil Service GP-B
22.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B
23.) Pondicherry Police Service, Group - B

இத்தேர்விற்கு 21 வயது நிரம்பிய ஒரு டிகிரி முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்தேர்வை பற்றிய கீழ்க்கண்ட கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.அவையாவன...

1.செலவு அதிகமாகுமா?
2.எவ்வளவு ஆண்டு தயாரிப்பு? 3.பயிற்சி எவ்வாறு பெறுவது? 4.தேர்வில் தோல்விக்குக் காரணங்கள் யாவை?
5.தமிழில் எழுத என்ன தடைகள்? 6.ஆங்கில அறிவு அவசியமா? 7.வயது வரம்பு தளர்வு மாணவரின் வகுப்பை பொருத்து எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
8.டிப்ளமோ படித்திருந்தால் எழுதலாமா? 9.திறந்தவெளி கல்வி முறை (Open University) செல்லுமா? 10எத்தனை முறை எழுதலாம்?
11.முதன்மைத் தேர்வு எழுதாமலிருந்தால் அது Attemptஆகக் கருதப்படுமா?
12.எவ்வாறு திட்டமிட வேண்டும்?

இவ்வினாக்களுக்குரிய விடைகள் இவ்விணைப்பில் http://taratdac.blogspot.ae/2013/06/blog-post.html முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன.படித்து பயன் பெறுக!
.
குறிப்பு:வரும் ஆண்டிற்குள் சுமார் இரண்டேகால்(2 ¼) இலட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


 
மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: இணையதளத்திலும் பதிவிறக்கலாம்

முஸ்லிம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்ல் 103 இடங்களும்,பல் மருத்துவப் படிப்பில் 37 இட ஒதுக்கீட்டு இடங்களும் நிச்சயம் உண்டு!அதிகமான கட் ஆஃப் மதிப்பெண்களை பெரும் அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கு பொதுபிரிவிலும் இடமுண்டு என்பதை மறவாதீர்!

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. நேரடியாகவும், இணையதளத்திலும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.விமலா, தேர்வுக் குழு செயலர் ஜி.செல்வராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:-

விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியிடப்படும். விநியோகம் மே 9-ஆம் தேதி முதல் தொடங்கும்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை ரூ.500 செலுத்தி நேரடியாகப் பெறலாம்.

இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்பவர்கள், விண்ணப்பத்துடன் ரூ. 500-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அளிக்க மே 27 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 26-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்து சேர கடைசித் தேதி மே 27 ஆகும்.

40 ஆயிரம் விண்ணப்பங்கள்: இரு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் அச்சடித்து விநியோகிக்கப்படும் என்றனர்.
மொத்த இடங்கள்: 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,655 எம்.பி.பி.எஸ்.இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (15 சதவீதம்) 398 போக மீதம் 2,257 இடங்களும், 8 சுயநிதிக் கல்லூரிகளில் 595 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இதுதவிர, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 இடங்கள் என மொத்தம் 2,917 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

பிடிஎஸ்: பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதம் 85 இடங்களுக்கும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 970 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் என மொத்தம் 1,055 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு எப்போது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, ஜூலையில் முதல் கட்ட கலந்தாய்வும், ஆகஸ்டில் 2-ஆம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:தினமணி-கல்வி-20 April 2016 12:29 AM
http://www.dinamani.com/…/%E0%AE%AE%E0%A…/article3389072.ece

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இரண்டு ஆண்டு ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவான காலியிடங்கள் விவரம்:
பணி: பொறியாளர்.
துறை: Electronics
காலியிடங்கள்: 06
ஊதியம்: மாதம் ரூ.21,000

துறை: Mechanical
காலியிடங்கள்: 06
ஊதியம்: மாதம் ரூ.21,000

துறை: Computer Science
காலியிடங்கள்: 02
ஊதியம்: மாதம் ரூ.21,000
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/Webadvt-29-03-2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளுக்கு விமான ஆணையத்தில் பணி




விமான ஆணையத்தில் (ஏஏஐ) நிரப்பப்பட உள்ள 220 ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ்
1. சிவில் - 50
2. எலக்ட்ரிக்கல் - 50
3. ஐ.டி.- 20

பணி: ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ்
காலியிடங்கள்: 100

வயது வரம்பு: 31.5.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் மற்றும் டெக்னாலஜி துறைகளில் சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணியிடங்களுக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aaiaero  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aai.aero  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நன்றி 

http://www.dinamani.com/employment
 

திங்கள், 18 ஏப்ரல், 2016

எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!

பிளஸ் டூ முடித்த பின்பு எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியர்களின் விருப்பமாகும். பல பெற்றோர்களும் இதையே விரும்புகின்றனர். இருப்பினும் கட் ஆப் மதிப்பெண் உச்ச நிலையில் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
மருத்துவம் படிக்க அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் கிடைக்காமற் போவதும் ஒரு சில புள்ளி மதிப்பெண்களில்தான் என்பதே இன்றைய நிலையாகும். +2 இரண்டாமாண்டுப் பயிலும் போதே திட்டமிட்டுப் படித்தால், எந்தச் சிக்கலுக்கும் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்திப் படித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் எந்தப் பிரிவினராக இருந்தாலும் படிப்பதற்கு இடம் பெற்று விடலாம். ஒருவேளை எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால்?
மனம் தளர வேண்டியதில்லை. மருத்துவ படிப்புகளும், மருத்துவம் தொடர்பான படிப்புகளும் நிறைய உள்ளன:

பி.டி.எஸ் (Bachelor of Dental science):

பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பிற்கும் 17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்படிப்பின் கால அளவு 5 ஆண்டுகளாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவம் படிக்கக் கட்டணம் குறைவு. ஆனால் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்பை முடிக்க ஏறத்தாழ 12 இலட்ச ரூபாய் வரை செலவாகும். முன்பு மருத்துவம் சார்ந்த தேர்வுகளுக்கு நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனால் இப்போது அரசால் நடத்தப்படுவதில்லை. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்கின்றன.
5 ஆண்டுகள் படிப்பில் 4 ஆண்டுகள் வகுப்பறையிலும் ஓராண்டு பயிற்சியிலும் ஈடுபடவேண்டும். 15,000 மாணவர்கள் இப்படிப்பில் வருடந்தோறும் சேர்க்கப்படுகின்றனர்.

பி.எச்.எம்.எஸ் (Bachelor of Homeopathic medicine & surgery):

பி.எச்.எம்.எஸ். எனப்படும் ஹோமியோ மருத்துவம் மற்றும் சிகிச்சைப் படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும். இப்படிப்பிற்கு ஏறத்தாழ நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
பி.எச்.எம்.எஸ் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றுப்படிப்பாகத் திகழ்கிறது. எம்.பி.பி.எஸ் படிப்பில் இடம் கிடைக்காதோர் இப்படிப்பில் சேர்கிறார்கள். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவமுறை இதுவாகும். 5.5 ஆண்டு படிப்பில் ஒரு வருடம் பயிற்சிக்குரிய காலமாகும்.

பி.எ.எம்.எஸ் (Bachelor of Ayurvedic medicine and surgery):

பி.எ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத மருத்துவம் பயில விரும்புவோர் 5.5 ஆண்டுகள் படிக்க வேண்டும். ஏறத்தாழ மூன்று இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இந்தப் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றாக உள்ளது. இந்திய அரசின் மத்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பை கவனிக்கிறது. மூலிகைகள் தொடர்பான மருத்துவ முறையாகும். 5.5 ஆண்டுப் படிப்பில் ஓராண்டு பயிற்சி காலமாகும்.

பி.யு.எம்.எஸ் (Bachelor of unani medicine):

எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைக்காதோருக்கு மாற்று மருத்துவப் படிப்பாக பி.யு.எம்.எஸ் எனப்படும் யுனானி மருத்துவப் படிப்பு உள்ளது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளை இந்திய அரசின் மத்திய மருத்துவக்குழு கவனிக்கிறது.
வழக்கமான 10 ஆம் வகுப்பு, +2 கல்வித் தகுதி, டழ்ங் - பண்ல் எனப்படும் படிப்பை (ஓராண்டு) முடித்திருக்க வேண்டும். உருது நுழைவுத் தேர்விலும், இந்தியில் 8ஆம் வகுப்பிற்குறிய சான்றிதழ் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்குரியக் கால அளவு 5.5 ஆண்டுகளாகும்.

பி.என்.ஒய்.எஸ் (Bachelor of Naturopathy and yoga science):

பி.என்.ஒய்.எஸ் எனப்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவப் படிப்புக்கு கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45 ஆயிரம் முதல் அமையும். நிறுவனங்களுக்கு ஏற்பக் கட்டண விகிதங்களும் மாறுபடும். இப்படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும்.

பி.வி.எஸ்சி & எ.எச் (Bachelor of veterinary science & animal Husbandry):

பி.வி.எஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப் படிப்பு 5 ஆண்டுகளில் நிறைவடையும். நிறுவனத்தின் தன்மைக்கேற்ப கட்டணங்கள் மாறுபடும். மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக பி.வி.எஸ்சி & எ.எச் உள்ளது. இந்திய கால்நடை மருத்துவக் குழு இப்படிப்பை கண்காணிக்கிறது. கால்நடைகளின் உயிர்க்கூறுகள் குறித்துப் படிப்பது இக்கல்வியாகும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 30-80 இடங்கள் உள்ளன. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணி புரியலாம்.

நவீன உலகில் மனஅழுத்தம் அதிகமாகி வருவதும் வாழ்க்கை மாற்றமும் இப்படிப்பிற்கான தேவையை அதிகரித்துள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, உணவு நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்டவை இப்படிப்பாகும். இதன் 5.5 ஆண்டு படிப்பில் ஓராண்டு பயிற்சிக் காலமாகும். பட்டயம், இளநிலை, முதுநிலை படிப்புகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படிப்பு இயற்கை உணவுமுறை குறித்து குறிப்பிடுகிறது. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு மருத்துவமனைகள் பணிபுரியலாம். வேறு சில நிறுவனங்களிலும் பணியாற்றலாம். இந்தியாவில் 10 கல்லூரிகள் இயற்கை மருத்துவம் கற்றுத் தருவதற்கு உள்ளன.
இந்தப் படிப்புகள் அனைத்துக்குமே கல்வித்தகுதி: 10, +2 படித்திருக்க வேண்டும். +2 படிப்பில் அறிவியல் பிரிவுப் பாடம் படித்திருக்க வேண்டும். உயிரியல், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

நன்றி :
http://www.dinamani.com/weekly_supplements

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

நெட்- தேர்வு

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

நன்றி:தினமணி-கல்வி 12 April 2016 03:30 AM
http://www.dinamani.com/…/%E0%AE%9F%E0%A…/article3376124.ece

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 878 டெக்னீசியன்

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 878 டெக்னீசியன், ஃபோர்மேன் பணி
மத்திய நிலக்கரி சுங்கத்தில் நிரப்பப்பட உள்ள 878 மைனிங் சித்தார், எலக்ட்ரீசியன், ஃபோர்மேன், மேற்பார்வையார் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ref.No: CCL/Recruitment/Advt.032016/04
மொத்த காலியிடங்கள்: 878
பணி: Junior Overman
பணி: Mining Sirdar
பணி: Deputy Surveyor
பணி: Assistant Foreman (Electrical)
பணி: Electrician (Non-Excavation) Technician
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Manpower-Recruitment),
Recruitment Department,
2nd Floor, Damodar Building,
Central Coalfields Limited,
Darbhanga House, Ranchi - 834 029.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
நன்றி:தினமணி-வேலைவாய்ப்பு 12 April 2016 12:40 PM
http://www.dinamani.com/…/%E0%AE%AE%E0%A…/article3376596.ece

திங்கள், 11 ஏப்ரல், 2016

பிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்புகள்

CIPET வழங்கும் பிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்புகள் 100% வேலை உறுதி!

நம் வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. பிளாஸ்டிக் இல்லாத உலகத்தைக் கற்பனையே செய்யமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அது இரண்டறக் கலந்து விட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் 80 சதவீத பொருட்களில் ஏதோ ஒரு விதத்தில் பிளாஸ்டிக் கலந்திருக்கிறது. இச்சூழலில் பிளாஸ்டிக் தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவை அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆனால், இத்துறை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வே இல்லை என்பதுதான் எதார்த்தம். நம் நாட்டில் பிளாஸ்டிக் தொடர்பான தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கு என்றே ஒரு அரசுக் கல்வி நிறுவனம் இயங்குவது பலருக்குத் தெரியாது. அந்நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பல்வேறு குறுகிய காலப் பயிற்சிகளும், இளங்கலை, முதுகலை, பட்டயத் தொழில்நுட்பப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

‘சிப்பெட்’ என்று அழைக்கப்படும், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் எஞ்சினியரிங் டெக்னாலஜி (Central Institute Of Plastics Engineering And Technology) நிறுவனம்தான் இப்படியான அரிய வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தால் 1968-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் சென்னை, மதுரை, உள்பட இந்தியாவெங்கும் 29 இடங்களில் இயங்குகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் குறுகியகாலப் பயிற்சிகள். இளங்கலை, முதுகலை படிப்புகள் பற்றி விவரிக்கிறார் துணை இயக்குநர் எஸ்.சுகுமார். Injection Moulding Machine Operator, Plastic Processing Machine Operator, Plastic Extrusion Machine Operator போன்ற பயிற்சிகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை ஆறுமாதகால படிப்புகள்.

Plastic Processing Technology படிப்பில், எந்தப் பிரிவைப் படித்த பட்டதாரிகளும் சேரலாம். இதுவும் 6 மாத காலப் படிப்புதான். Plastic Mould Design Using Auto CAD படிப்பில் டிப்ளமோ/ பி.இ. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்கள் சேரலாம். இது 4 மாத காலப் படிப்பு. 6 மாத, 4 மாத காலப் படிப்புகளில் சேரும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்குகின்றன. வெளியூரில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்தப் படிப்புகள் பேட்ச், பேட்சாக வழங்கப்படுகின்றன. மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

Diploma in Plastic Technology, Diploma in Plastic Mould Technology ஆகிய மூன்று ஆண்டுகால படிப்புகளில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் B.E. Plastics Technology, Manufacturing Technology ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் +2 முடித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள். Plastic Moulding Design with CAD/CAM படிப்பில் டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் சேரலாம். இது ஒன்றரை ஆண்டு காலப் படிப்பு. M.Tech. Plastic Technology/Engineering, CAD/CAM போன்ற முதுகலை படிப்புகளும் உண்டு.

Post Diploma in Plastics Mould Design with CAD/CAM, Plastics Processing and Testing, Plastic Testing and Quality Management ஆகிய முதுநிலை பட்டயப் படிப்புகளும் இங்கு உண்டு. M.Sc. Meterial Science and Technology என்ற ஐந்து ஆண்டுகால ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில், +2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். பிளாஸ்டிக் தொடர்பான குறுகிய காலப் பயிற்சிகள், பட்ட, பட்டயப் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவர்கள் தயக்கமின்றி இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்” என்கிறார் சுகுமார். எப்படி விண்ணப்பிப்பது?

CIPET, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032 அல்லது Advanced Tooling & Plastics Product Development Centre (ATPDC), 35/1, 2nd Floor, Paddy and Flower Market Complex, Mattuthavani, Madurai - 625 007 என்ற முகவரியில் இருக்கும் நிறுவன வளாகங்களில் நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.250. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 50. ‘Cipet, Chennai ’ என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து சென்னை முகவரிக்கு அஞ்சலில் அனுப்பியும் விண்ணப்பத்தை பெறலாம். குறுகிய காலப் பயிற்சிகள் தவிர பிற படிப்புகளுக்கு ‘Joint Entrance Examination’ என்ற நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.5.2016. தேர்வு நடைபெறும் நாள்: 5.6.2016.

கூடுதல் விபரங்களுக்கு துணை இயக்குனர் சுகுமாரைத் தொடர்பு கொள்ள: 98407266400

நன்றி:- எம்.நாகமணி .தினகரன் -கல்வி 4/7/2016 10:47:11 AM
http://kalvi.dinakaran.com/…/CIPET_offering_courses_in_plas…

ஓவியம் & வண்ணம் தீட்டும் போட்டி



ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மேலாண்மை படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள

மேலாண்மை படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மவர்களிடம் அதிகம். எனவே, எம்.பி.ஏ., படிப்பிற்கு வெளிநாடுகளில் எந்தமாதிரியான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

1.THE LONDON BUSINESS SCHOOL WOMEN SCHOLARSHIP
வெளிநாட்டில் MBA படிக்க விரும்பும் தகுதியுள்ள மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிரிட்டனிலுள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது.
மதிப்பு - முதல் வருட கட்டணம் இதில் அடங்கும்.
விபரங்களுக்கு www.london.edu/programmes/mba/scholarships.html

2.SGU COMMONWEALTH JUBILEE SCHOLARSHIP PROGRAMME
பிரிட்டனிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலையில் முதுநிலை மேலாண்மை படிப்பை மேற்கொள்ள விரும்பும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 60 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
செயின்ட் ஜார்ஜ் பல்கலை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - ஒட்டுமொத்த கல்விக் கட்டணமும் அடங்கும்.
விபரங்களுக்கு www.sgu.edu/financial-services/grad-scholarships.html

3.THE DISTINGUISHED FELLOWS PROGRAMME
சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பெல்லோஷிப், அக்கல்வி நிறுவனத்தில் பயிலும் திறன்வாய்ந்த மாணவர்களுக்காக வழங்கப்படுகிறது.
சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிறுவனத்தால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மதிப்பு - 2 ஆண்டுகளுக்கான முழுநேர கல்விக் கட்டணம் மற்றும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 20,000 டாலர்கள் உதவித்தொகை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
விபரங்களுக்கு www.student.chicagobooth.edu/group/distinguished fellow/index.html

4.STIRLING MASTER OF BUSINESS ADMINISTRATION (MBA) SCHOLARSHIP
பிரிட்டனின் ஸ்டிர்லிங் பல்கலையில் முழுநேர எம்.பி.ஏ., படிக்கும் நபர்களுக்காக, 2 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - கல்விக் கட்டணத்திலிருந்து, 7,700 பிரிட்டன் பவுண்டுகள் தள்ளுபடி செய்யப்படும்.
விபரங்களுக்கு www.stir.ac.uk/postgradu…/financial-information/scholarships

5.FORTE FELLOWSHIP
அமெரிக்காவின் எம்.ஐ.டி., சோலன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில், மேலாண்மை படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற, மாணவிகள் சிறப்பான தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த வேண்டும்.
MIT சோலன் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது.
மதிப்பு - கல்விக் கட்டணத்தில் பாதியளவு தொகை தள்ளுபடி செய்யப்படுவதோடு, மாணவர்களின் தேவைக்கேற்ப 1,000 அமெரிக்க டாலர்கள் முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படும்.
விபரங்களுக்கு www.fortefoundation.org/site/PageServer?pagename=why_fellows
நன்றி:தினமலர்-கல்விமலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp…


செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருப்பூர் நகரில் புதிய இஸ்லாமிய பள்ளி துவங்கப்பட்டது

திருப்பூர் நகரில் புதிய இஸ்லாமிய பள்ளி
துவங்கப்பட்டது
அத் தஃக்வா இஸ்லாமிக் ஸ்கூல்
இஸ்லாமிய மார்க்கத்தையும் அரசின்
பாடத்தையும் இணைத்துக் கற்றுத் தரும்
பள்ளி
ஒத்துப் போகும் கருத்தில் ஒருங்கிணைந்துள்ள
11 சகோதரர்களின் இலாப நோக்கமில்லா
முயற்சியால் இஸ்லாமியப் பள்ளி உருவாகி உள்ளது
முஸ்லிம் உம்மத்திற்கு நன்மை பயக்கும் செயலை
யார் செய்தாலும்...... இயக்கம் மற்றும் கொள்கை
வேறுபாட்டை மறந்து ஆதரிக்கும் நல்ல எண்ணம்
சமுதாயத்தில் வளர்ந்து வருகிறது
அல்ஹம்ந்துலில்லாஹ்




உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...

உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...
பெயர்:- அபுல் காஸிம் அல் ஜஹ்ராவி (ஆங்கிலத்தில் அல்புகாசீஸ் –Albucasis என்றழைக்கப்படுகிறார்)
வாழ்ந்த காலம்: (கி.பி.936-1013)
சிறப்புகள்:-அறுவை சிகிச்சையின் தந்தை (Father Of Surgery) என்றழைக்கப்படுகிறார். மகளிர்,மகப்பேறு மருத்துவத்தின் முன்னோடி இவரே! கருவில் இறந்த சிசுவை வெளிக்கொணர்ந்த முதல் மருத்துவரும் இவரே.




நன்றி:Islam Ashiq

நன்றிக் கடன்.....

 நன்றிக் கடன்.....
*******************
கல்வி மற்றும் மருத்துவம் மனிதனின்
மூலாதாரமான இரண்டு துறைகள்
வரலாறு முழுவதும் முஸ்லிம்
ஆட்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள்
அனைவரும் கல்வியையும் மருத்துவத்தையும்
சேவையாக இறைவனுக்கு செய்கின்ற
வழிபாடாகவே செய்துள்ளனர்


தமிழக முஸ்லிம்களில்
வள்ளல்களாக வாழ்ந்து மறைந்துள்ள
முந்தைய தலைமுறை இரத்தம் சிந்தி
உழைத்து உண்டாக்கிய சொத்துக்களை......
அள்ளிக் கொடுத்த கொடையின் அடையாளம் தான்
இன்று வளர்ந்து நிற்கும்......


வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி
அதிரை காதிர் மொய்தீன் கல்லூரி,
சென்னை புதுக்கல்லூரி
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
இளையான்குடி ஜாகிர் ஹுசைன் கல்லூரி
போன்ற கலை அறிவியல் கல்லூரிகள்
தியாகத்தின் அடையாளமாக நிற்கும்
இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்து
இப்போது பொருளாதாரத்தில் வளர்ந்து
நிற்கும் இன்றைய தலைமுறை திருப்பி
இந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு
இரண்டு மடங்காக செய்ய கடமைப்பட்டுள்ளது
அது தான் நன்றிக் கடன். 


அப்போது கூட அவர்களின் தியாகத்தை
நெருங்க இயலாது.
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில்
தமிழக மக்களுக்கு இலவசமாக கல்வி வழங்கும்
பொறுப்பை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு இன்றைய தலைமுறை தங்களது
சொத்துக்களை தியாகம் செய்ய முன்வர வேண்டும்
-cmn saleem

டி.என்.பி.எஸ்.(TNPSC) சியில் வெற்றி பெற உதவும் ஆண்ட்ராய்டு போன் ஆப்!

இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு எக்கச்சக்க வழிகாட்டுதல்கள் உண்டு. ஆக, ஒப்பீட்டளவில் நம் தமிழ்நாட்டுக்குள் நடக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு ஆப்கள் மிகக் குறைவே. அந்த வகையில் அதிகம் போட்டியின்றி முன்னிலை வகிக்கிறது இந்த ஆப். டி.என்.பி.எஸ்.சி தேர்வு பற்றிய அடிப்படைத் தகவல்கள், அதற்கான சிலபஸ், தினந்தோறும் பயிற்சித் தேர்வு, மாதிரி வினாத்தாள், பள்ளிப் பாடங்களில் இருந்து குறிப்புதவிகள் என அத்தனையும் இதில் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழகத்தின் முன்னணிப் போட்டித் தேர்வுக்கு முதன்மையான வழிகாட்டி!

https://play.google.com/store/apps/details?id=nithra.tnpsc

 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

உங்கள் பெண் பிள்ளையை கல்விச் சிந்தனையாளராக உருவாக்க ஒரு வாய்ப்பு

உங்கள் பெண் பிள்ளையை
கல்விச் சிந்தனையாளராக
உருவாக்க ஒரு வாய்ப்பு
*******************************
சமூகத்தின் சிந்தனையை செதுக்கும்
ஆற்றல் கல்வித் துறைக்குத் தான்
இருக்கிறது


மனித நாகரீகத்தை மேம்படுத்தும்
மிக உயர்வான கல்வி முறையை
வடிவமைக்கும் தகுதி இந்த உலகில்......
.....இறைவேதத்தையும் இறைத்தூதரின்
வழிகாட்டுதலையும் அறிவாக பெறும்
முஸ்லிம்களுக்குத் தான் இருக்கிறது
ஆனால் முஸ்லிம்கள் அந்த தகுதியை
வளர்த்துக் கொள்ளாததால்...... அறிவுக்
குறைபாடுடைய அறிஞர்கள் கையில்
இந்த உலகின் கல்வித்துறை சிக்கியுள்ளது

அறிவுத்துறையை செழுமைபடுத்த
மனித குலத்தின் சிந்தனையை
செம்மைபடுத்த ஏராளமான முஸ்லிம்
கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்க
வேண்டும்

அதன் முன்முயற்சியாக அம்மாபட்டினம்
அன்னை கதீஜா கலை அறிவியல்
மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு முதல்
கல்வியியலில் முதுகலை படிப்பு ( M.A. Education)
துவங்கப்பட்டுள்ளது

முஸ்லிம் பெண் சமூகத்திலிருந்து
கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டும்
என்ற குறிக்கோளோடு இதன் பாடத்திட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளது

* இஸ்லாமிய கல்வித் தத்துவம்
* பிற மதங்களின் கல்வி கொள்கை
* முஸ்லிம் அறிஞர்கள் மற்றும்
இந்திய / உலக அறிஞர்களின் கல்விச் சிந்தனைகள்
* இந்திய / உலக கல்வி அமைப்பு
* பள்ளி கல்லூரி நிர்வாகம்
* தலைமைத்துவ பண்புகள்

.....போன்ற சிறப்புப் பாடங்களுடன்
2 ஆண்டு படிப்பாக துவங்கப்படுகிறது
20 மாணவிகள் மட்டும் இதில் சேர்கப்படுவார்கள்
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள்
இதில் சேர தகுதியுடையவர்கள்

மேலும் விபரம் அறிய :
7598461650